Monday, September 29, 2014

யார் குற்றவாளி??

   இன்று காலையில் பெயர் தெரியாத, புதிய நண்பர் ஒருவருடன்,  ஜெ, விற்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து பேசிக் கொண்டிருக்கையில், ஜெ, இனி தேர்தலில் நிற்க முடியாது என்று சொல்லிய போது, அவர் கேட்டார் அப்போ ஆ.ராசா மட்டும் தேர்தலில் நின்றாரே என்றார்.

  எனக்கு தூக்கிவாரிப்போட்டது. இன்னும் நம் மக்கள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கும், குற்றம் சாட்டப்பட்டவருக்குமான வித்தியாசத்தைக் கூட புரிந்து கொள்ளவில்லையே என வியந்தேன்.

  ஆனாலும் அவருடைய இந்நக் கேள்வி என்னை கொஞ்சம் சிந்திக்கத் தூண்டியது.

   முதலில் நம் நாட்டில் எந்தக் குற்றவாளியாவது, குற்றம் சாட்டப்பட்ட உடனேயே தண்டனை அனுபவித்த வரலாறு உண்டா என எண்ணிய போது, யாருமே என் கண் முன்னால் வரவில்லை.

  ஆனால், குற்றம் சாட்டப்பட்ட உடனே, சிறையிலடைக்கப்பட்டதற்கு, ராசா வெளியில் இருந்தால் சாட்சிகளை மாற்றி விடுவார்,என்று காலணம் கூறியது நம் நாட்டு சி.பி.ஐ.  அப்படியென்றால் இந்த வழக்கின் தீர்ப்பு வருகின்ற வரை ஆ.ராசா சிறையில் தானே அடைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏன்  தேர்தல் முடிந்த உடனேயே ஜாமீனில் விடுதலை செய்தார்கள்.

சரி,

  பதினெட்டு ஆண்டு காலம் ஜெ, வின் வழக்கு நடந்து கொண்டு தான் இருந்தது. எப்போதாவது ஜெ, சாட்சிகளை மாற்றி விடுவார் என்று சிறையில் அடைக்கப்பட்டதுண்டா!!
ஜெ, வெளியே இருந்து கொண்டு சாட்சிகளை மனமாற்றம் செய்யாமலா இருந்தார். இல்லை மனமாற்றம் செய்ததால் அவருக்குத் தண்டனை கிடைக்காமல் தான் போய்விட்டதா!!

   நம் நாட்டு மக்கள் சிறையில் அடைக்கப்பட்டு விட்டாலே, அவர் குற்றவாளி என நம்பி விடுவார்களென்பதை ஆரிய சக்திகள் நன்கு அறிந்து வைத்திருக்கிறது. அதனாலேயே ராசாவைக் குற்றவாளியாகத் தெரிவித்த உடனேயே, அவரைச் சிறையில் அடைத்து ஊழல் செய்ததால் தண்டனை பெற்றவர் போல காட்டிக் கொண்டனர். இறுதியில் தேர்தலில் வென்றனர். தங்கள் வேலை முடிந்து விட்டது, ஆ.ராசாவை ஜாமீனில் விடுதலை செய்தனர்.

   ஸ்பெக்ட்ரம் வழக்கின் முதல் படி, இங்கே தான் இருக்கிறது. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அப்போது யார் குற்றவாளி என்று உங்களுக்கு நன்கு புலப்படும்.

No comments:

Post a Comment