Sunday, September 14, 2014

என் வாழ்வின் வைர நாள்

     இந்த ஆண்டு பிறந்த நாளுக்கு என்ன தான் செய்யப் போகிறோமோ என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில் வியாழக்கிழமை இரவே என்னுடைய முகநூல் பக்கத்தில் வாழ்த்துச் சாரல் கொஞ்சம் கனத்த சாரலாகவே இருந்தது. அந்த சாரலில் நனைந்த குதூகலம் என்னை புத்தாடை எடுக்கத் தூண்டியது.

  ஏற்கனவே என்னிடம் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற வேண்டுமென்றால் ஏதாவது வாழ்த்து பெறுகிற தினங்களை ளற்படுத்திக் கொள்ளுங்கள் என மதிப்பிற்குரிய தலைவரின் வீட்டு உதவியாளர் செல்வம் பிரகாஷ் அவர்கள் கூறியது நினைவிற்கு வந்தது. அவருக்குப்போன் செய்தேன். அடுத்து என் மதிப்பிற்குரிய அண்ணன் விஜய் பிரவீன் அவர்களிடம் பேசி எப்படியாவது தலைவரைச் சந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தாருங்கள் அண்ணா என்று சொல்லியபோது, அவரும் கிளம்பி வா தம்பி பாத்துக்கலாம் என இசைவு தெரிவிக்க மகிழ்ச்சியோடு கிளம்பினேன். ஆனாலும் மனதிற்குள் தலைவரைச் சந்திக்காமல் சென்னையை விட்டு திரும்பக் கூடாது என்று மனதில் பதிந்து வைத்துக் கொண்டேன். சிவகிரி அண்ணன் தனுஷ்குமரன் அவர்களோடு சென்னை கிளம்பினேன்.

  கனத்த சாரல் வலுப்பெற்று இடியுடன் பெய்த மழைபோல் வாழ்த்துக்களெல்லாம் என்னுடைய வாலில் கொட்டித் தீர்த்துக் கொண்டுருந்தது. அண்ணன் மகிழன் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றேன்.  இன்றாவது அக்காவிடம் பேசிவிடலாமா என்ற சந்தேகத்தோடு போன் செய்து காத்திருந்த எதிர்முனையில் அக்காவின் குரல் அன்பாய் ஒலித்தது.  அக்கா எனக்கு இன்று பிறந்த நாள் என்ற போது, உனக்கும் இன்னைக்கு தான் பிறந்த நாளா!! (அய்யா தங்கபாண்டியன் அவர்களின் பிறந்த தினத்தில் தான் நானும் பிறந்திருக்கிறேன்) என்று கேட்டு மனமுறுக வாழ்த்தினார் அன்பிற்கினிய அக்கா தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள்.

  என் அன்பிற்கினிய அண்ணன் முன்னாள் அமைச்சர் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களிடமும், அண்ணன் வி.பி.ஆர்.இளம்பரிதி, கதிரவன், எங்கள் அன்பு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கே.ஜி.இராஜகுரு அவர்களிடமும் வாழ்த்துப் பெற்ற போது அகமகிழ்ந்து போனேன்.

  திடீரென அண்ணன் விஜய் பிரவீன் அவர்கள், மதுரையில் இளம்பெண்கள் மீது திராவகத்தை ஊற்றிய கொடுங்கோலர்களைக் கண்டித்து சத்யம் தொலைக்காட்சிக்கு, ஒரு பேட்டி கொடுக்கத் தயாராகிக்க தம்பி என்று போன் செய்து சொல்லி, பேட்டி கொடுத்ததற்கான காரணம் மிகவும் மனதை வருத்தக் கூடிய விசயமாக இருந்தாலும், பிறந்த நாளன்று தொலைக்காட்சிப் பேட்டி என்று கடுகளவு மகிழ்ச்சி.

   பின் தலைவரைச் சந்திக்க மாலை 6 மணிக்கு கோபாலபுரம் இல்லத்திற்கு செல்ல, நான், தாம்பரம் சதீஸ், தனுஷ்குமரன் அண்ணன் ஆகிய மூவரும் சென்றோம்.

   தலைவர் இல்லத்தில் புகாருக்காக ஒரு கழக உடன்பிறப்புகள் கூட்டம் காத்திருந்தது. எங்கே இவர்களை மட்டும் சந்தித்து விட்டு, நம்மள சந்திக்கீம போய்விடவாரோ தலைவர் என்று எங்களுக்குள் அளவளாவிக் கொண்டோம்.

  திடீரென தலைவரின் உதவியாளர் தம்பி முன்னாடி வாப்பா என அழைக்க, பதறி ஓடினேன். கை கள் படபடத்தன. நெஞ்சம் வேகவேகமாக துடிக்க ஆரம்பித்தது. தலைவர் வீட்டு வாசற்கதவில் தலைவரின் அருகே நிற்க வைக்கப்பட்டேன்.

  தலைவர் கலைஞரை மிக மிக அருகில் கண்டது இதுவே முதன் முறை. தலைவரின் அருகில் சென்றேன்.

"அய்யா இன்னைக்கு எனக்குப் பிறந்த நாள்"

தன்னுடைய கரகரத்த குரலில் "வாப்பா பிறந்த நாளா" என்றார் என் அன்புத் தலைவர் கலைஞர் சொக்கிப் போனேன்.

  "இது நான் உங்களைப் பற்றி எழுதி முதல்பரிசு பெற்ற கட்டுரை அய்யா" என்று கூறி இணையதள தி.மு.க சார்பாக நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற என்னுடைய கட்டுரையை தலைவரிடம் சமர்ப்பித்தேன்.

   கட்டுரையின் முதல் பக்கத்தைச் சிறிது நொடி படித்துவிட்டு, என்னை ஏறெடுத்துப்பார்த்தார் அன்புத் தலைவர் கலைஞர்.

  அந்த நொடி சொர்க்கம் இப்படித்தான் இருக்கும் என்பதை உணர்த்தியது. பாதங்களைத் தொட்டு வணங்கி தலைவர் கலைஞரிடம் இருந்து விடைபெற்றேன்.

    என்னாளும் இல்லா திருநாளாய் என்னுடைய 24 ஆம் பிறந்த நாள் வைர எழுத்துக்களில் என்னுடைய வாழ்க்கை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாளாய் அமைந்திருக்கிறது.

   தயவு செய்து  சிலர் என்னை மன்னிக்கவும். வாழ்த்துச் சொன்ன சிலருக்கு நன்றி சொல்ல இயலவில்லை. ஆதலால் நன்றியை ஒட்டுமொத்தமாக இப்பதிவிலே வைக்கிறேன்.

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!!
தலைவரைச் சந்திக்க உதவிய அனைவருக்கும் நன்றி!!
சத்யம் தொலைக்காட்சியில் பேட்டியளிக்க வாய்ப்பு தந்தவர்களுக்கும் நன்றி!!

No comments:

Post a Comment