Wednesday, September 17, 2014

ஜெ,வின் சொத்துக்குவிப்பு வழக்கு

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பைக் காட்டிலும், அதிக எதிர்பார்ப்போடும் பரபரப்போடும் தமிழக மக்கள் மத்தியில் விளங்கிய ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு செப் 20 ஆம் தேதியிலிருந்து செப் 27 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கிட்டதட்ட 18 ஆண்டுகளாக பல நூறு வாயுதாக்களையும், பல வித விசாரனைகளையும், தன்னை விசாரிக்க வேண்டிய வழக்கறிஞரைத் தான் தான் நியமிப்பேன என்பது போன்ற சர்ச்சைகளையும், சுதாகரன் தன்னுடைய வளர்ப்பு மகனே இல்லை என்பது போன்ற வாதங்களையும், காளான் வளர்ப்பின் மூலம் பல நூறு கோடிகளைச் சம்பாதிக்க முடியும் என்பது போன்ற அறிவிலி செயல்களையும் தாண்டி தீர்ப்பை அறிவிக்கக் கூடிய நேரத்தில், தீர்ப்பின் தேதியிலும் மாற்றத்தைக் கொண்டு வரவைத்த ஜெ, வின் சொத்துக்குவிப்பு வழக்கு, இந்திய நீதிமன்ற வரலாற்றில் ஒரு விசித்தரமான வழக்கு.

டான்சி நில அபகரிப்பு வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதி, மனசாட்சிப்படி உணர்ந்து தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் என்று, கொள்ளையடித்த ஜெயலலிதாவிற்கு அறிவுரை சொல்லி அனுப்பிய நீதிபதியும் ஜெ, வின் வழக்குகளில் அடங்குவார்கள்.

இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்படி வரப்போகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

நீதி வழங்க வேண்டிய தேதியையை மாற்ற வைத்த, ஜெ,வுக்கு நீதியையே மாற்ற எவ்வளவு நேரமாகும் என்றும், முந்தைய வழக்கைப் போல் ஏதாவது அறிவுரை சொல்லி அனுப்பப்படுவார் என்றும் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டு, அடுத்தகட்டத்தை நோக்கி நகரலாம் என்று கிளம்பிவிட்டேன்.

ஆனாலும், சில நண்பர்கள், இப்போதிருக்கக் கூடிய நீதிபதி மிகவும் கண்டிப்பானவர். நல்லவர் வல்லவர் என்பது போன்ற வாதங்களை எடுத்துரைக்கின்றனர்.

அதையும் தாண்டி, மோடியைத் தவிர்த்து, பா.ஜ.கவின் அமித் ஷா உள்ளிட்ட முன்னணித் தலைவர்களும், தமிழக பா.ஜ.க தலைவர்களும் ஜெ, விற்கு சிறைத் தண்டனை கிடைக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் குறைந்தது பதினைந்து ஆண்டுகளாவது தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என்றும் பா.ஜ.வினர் விரும்புவதாக சொல்கின்றனர்.

இருக்கட்டும்.

27 ஆம் தேதியாவது மீண்டும் தேதியை மாற்றாமல் தீர்ப்பு வெளியாகுமா என்பது கூட சந்தேகம் தான்.

நீதி தேவதைக்கு வெளிச்சமா!! ஜெ,விற்கு வெளிச்சமா!! என்பது இலைமறை காயாகவே உள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம்!!

No comments:

Post a Comment