Thursday, September 11, 2014

செல்போன் கட்டணம் உயர்ந்தது!!

கடந்த நான்கு ஆண்டுகளாக நானும் செல்போன் பயன்படுத்தி வருகிறேன். ஏர்டெல் நெட்வொர்க் லிருந்து இதுவரை மாறவில்லை. ஒரே எண் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

நான் செல்போன் வாங்கிய புதிதில் ஏர்டெல் எண்களுக்கு பத்து பைசாவும், மற்ற எண்களுக்கு முப்பது பைசா வரை கட்டணமாகும் ரேட் கட்டருக்கு 195 ரூபாய் மூன்று மாதங்களுக்குச் செலவானது.

அதே போல் இண்டர்நெட்டிற்கு 98 ரூபாய்க்கு 1 gb என்பது ஒரு மாதத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இது மூன்றாண்டுகளுக்கு முந்தைய செல்போன் கட்டணங்களின் நிலை.

செல்போன் கட்டணங்கள் செல்போனின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க குறையத்தான் வேண்டும். ஆமாம் எப்படி என்று கேட்கிறீர்களா!!

ஆரம்பத்தில் செல்போன் வந்த போது, இன்கமிங் காலுக்கு பதினாறு ரூபாயும், அவுட் கோயிங் காலுக்கு பதினாறு ரூபாயும் கட்டியவர்கள் தான் நம் இந்திய நாட்டு மக்கள் என்பது செல்போன் தொடக்கத்தில் இருந்து பயன்படுத்தியவர்கள் நன்கு அறிவர்.ஆக, அதைத் தொடர்ந்து செல்போன் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இன்கமிங் காலுக்கு உண்டான கட்டணம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவுட்கோயிங் காலுக்கான கட்டணம் குறைக்கப்பட்டது.

இதே வகையில் நான் செல்போன் வாங்கிய போது உண்டான கட்டணத்தையும், கடந்த ஓராண்டுகளாக உள்ள கட்டணத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் கட்டணம் குறைந்திருக்க வேண்டும் என்பது தான் விதி.

ஆனால் கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக குறிப்பாக முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா அவர்கள் அமைச்சரவையிலிருந்து விலகியதற்குப் பின்னால் தொடர்ந்து கட்டணம் உயர்ந்து கொண்டிருப்பதை நன்கு அறிவீர்கள் என நம்புகிறேன்.

ஆக, இனிமேலாவது ஆ.ராசா அவர்கள் தொலைத் தொடர்புத் துறையில் எப்படிச் செயல்பட்டார் என்பதை சற்று சிந்தித்துப் பார்த்தீர்களேயானால், ஆ.ராசா அவர்கள் தொலைத்தொடர்புத் துறைக்கு அமைச்சராக இருந்த காலம், தொலைத் தொடர்புத்துறைக்கும் செல்போன் பயனீட்டாளர்களுக்கும் "மிகச் சிறந்த பொற்காலம்" என்பதை நன்கு உணர்வீர்கள்.

No comments:

Post a Comment