Tuesday, September 2, 2014

பன்னீர் ஊற்றி வளர்க்கப்படும் இந்தி

மத்திய அரசு அலுவலகங்களில் பன்னீர் ஊற்றி வளர்க்கப்படும் இந்தி.

சற்று நேரத்திற்கு முன், பிஎஸ்என்எல் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். உள்ளே நுழைந்தவுடன் பளீச் என அறிவிப்பு பலகை ஒன்றிலே இந்தி வார்த்தை ஒன்று எழுதப் பட்டிருந்தது.

அதுபற்றி, உள்ளே சென்று, பில் கட்டியவுடன், அங்கே இருந்த ஊழியரிடம் நகைத்துக் கொண்டே கேட்டேன். என்ன சார் மறுபடியும் இந்தியைக் கொண்டு வந்துட்டிங்க போல என்று கேட்க, அவர் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி எப்போதுமே பயன்படுத்தக் கூடிய ஒன்று தான். அதில் எந்த சந்தேகமும் வேண்டும். ஆனால் இப்போதிருக்கக் கூடிய மத்திய அரசு மிக அதிகமாகவே இந்தியை வளர்க்க நினைக்கிறது என்றார். அப்போ மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்த வேண்டியிருக்குமா சார் என்று கேட்க, இல்லை தம்பி வராது, மாநில அரசாங்கத்தில் இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று மத்திய அரசு கூறும் நிலை வந்தால் மட்டுமே, மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரக்கூடும் என்றார்.

அந்த அறிவிப்புப் பலகையில், இந்தியில் ஒரு வார்த்தை எழுதப்பட்டிருந்தது. அதன் கீழே ஆங்கிலத்தில் nirthaarஙென்றும் அதன் கீழே permanent என்றும் அதற்குக் கீழே "நிரந்தரம்" என்றும் எழுதி அலுவலகம் வருகின்ற மக்களுக்கு இந்தியைக் கற்றுக் கொடுக்கிறது மத்திய அரசு என்பதைப் புரிந்து கொண்டேன்.

கற்றுக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள் மத்திய அரசே!!

திருச்சி அஞ்சல் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை தார் கொண்டு முதன்முதலில் அழித்த கலைஞர் இன்னும் உயரோடு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.

No comments:

Post a Comment