Tuesday, February 4, 2014

மு சீதாராமன்- பராசக்தி கதை வசனம்

தலைவர் கலைஞரின் கதை வசனத்தில் உருவான பராசக்தி திரைப்படம்  தமிழ்த்திரையுலகில் அருமையானதொரு திரைக்காவியம். அந்தக் காவியத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நீண்டதொரு வசனத்தை அடுக்காக அழகாக பேசியிருப்பார். அதுபோல் எனக்கும் பேசவேண்டும் என்று ஒரு சிறு ஆசை வெகுநாட்களாகவே இருந்தது. நேற்று தான் இதை தயார் செய்தேன். இந்த வசனத்தை என்னுடைய வாழ்வில் நடைபெற்ற சில சுவாரஸ்யமான விசயங்களை கருத்தில் கொண்டு நான் இந்த வசனத்தை தயார் செய்தேன்.

படித்துப் பாருங்கள்..

"நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. புதுமையான பல மனிதர்களைச் சந்தித்திருக்கிறது. இந்த வழக்கும் விசித்திரம் அல்ல. வழக்காடும் நானும் புதியவனல்ல. வாழ்க்கைப் பாதையில் சர்வ சாதாரணமாகத்தென்படும் ஜீவனுள் நானும் ஒருவன்".

இன்ஸ்பெக்டரை சொடக்கு போட்டு அழைத்தேன். எம்.எல.ஏ வை பேஸ்புக்கிலே கேள்வி கேட்டேன், குற்றம் சாட்டப் பட்டிருக்கிறேன், இப்படியெல்லாம்.

இன்ஸ்பெக்டரை சொடக்குப்போட்டு அழைத்தேன், அவரை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. கொலைகாரனின் தம்பியை விசாரணைக்கு அழைத்துச் சென்று குற்றவாளியைக் கண்டு பிடிப்பதற்கு முன் பேருக்கு அழைத்துச் சென்று விசாரிக்காமல்  எங்கள் கண் மறைந்தவுடன் பத்திரமாக அவனை வீட்டிலே கொண்டு போயி இறக்கி விட்டார் என்பதற்காக.

எம்.எல்.ஏ விடம் கேள்வி கேட்டேன், அவருக்கு பதில் தெரியாது என்பதற்காக அல்ல. எங்கள் தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரிடம் தொகுதி மக்களுள் ஒருவனான நான் கேள்வி கேட்க உரிமை இருக்கிறது என்பதற்காக.

உனக்கேன் இவ்வளவு அக்கறை. உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன்.

சுயநலம் என்பீர்கள். இந்தச் சுயநலத்திலே பொது நலனும் கலந்திருக்கிறது. ஆதாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் அதைப்போல.

காலையிலே எழுந்தவுடன் குளித்துக் கிளம்பி பஸ் ஏறி வேலைச்செல்ல பஸ்நிலையத்துக்குச் சென்றேன். பஸ் வந்தது ஏறினேன்.

சொக்கநாதன்புத்தூர் நீளமான பெயர். ஆனால் என்ன நல்ல ரோடு தான் ஒரு மீட்டர் நீளம் கூட இல்லை.

ரோடு முழுவதும் மண்டிய புகை. சுற்றிலும் செங்கல் சூளை. நல்ல ரோட்டைத் தேடி அலைந்தேன்.

சொக்கநாதன்புத்தூரை முன்னேற்ற நினைத்தார்களே, அதற்குப் பதிலாக அதன் இயற்கை வளத்தை அல்லவா சுரண்ட நினைத்தார்கள்.

பேஸ்புக்கிலே கேள்வி கேட்டதற்காக என் மீது குற்றம் சுமத்தி இதோ நிற்கிறாரே எம்.எல்.ஏ, ஓட்டுப் போட்ட மக்களுக்கு நல்ல ரோடு போட்டுக் கொடுங்கள் என்று ஸ்டேடஸ் போட்டதற்காக என்னை ப்ளாக் செய்தார்.

பகட்டு வாட்டியது
பணம் மிரட்டியது
பதவி பயமுறுத்தியது

ஓடினேன் ஓடினேன் ரோடு சரியில்லை என்பதற்காக  வேலை பார்க்கும் இடம் வரை ஓடினேன்.

என் ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும். நல்ல ரோடு போட்டுக் கொடுத்திருக்க வேண்டும்.

இன்று சட்டத்தை நீட்டுவோர் செய்தார்களா?????

( திட்டுறவங்க யாரா இருந்தாலும் கமென்ட்லயே திட்டிக்கலாம்,முழு உரிமை உண்டு. ஏன்னா இதைப் படிச்சவங்க நீங்க தான..)