Thursday, February 7, 2019

நீட் தேர்வில் தமிழகம் மிகப்பெரிய வெற்றி.

தமிழகத்தில் தான் நீட் தேர்வில் அதிகளவில் மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆகவே, திமுக வின் தமிழன் பிரசன்னா தற்கொலை செய்யத் தயாரா?? யென ஒரு தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
  அட முட்டாப் புன்னகைகளே,,, நாங்கள் கேட்டது எண்ணிக்கை அல்ல. அனிதாக்களும் மருத்துவராக வேண்டும் என்பது மட்டுந்தான். தமிழகத்தில் யார் அந்த வெற்றியை அடைந்திருக்கிருக்கிறார்கள் என்றெண்ணிப் பார்க்க வேண்டும். எல்லா இடங்களையும் சிபிஎஸ்இ மாணவர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அரசுப்பள்ளியோ அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்தோ மருத்துவக்கல்லூரிக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 95 சதவிகிதத்துக்கும் மேல் குறைந்துவிட்டது. சரி,, சிபிஎஸ்இ பள்ளியில் படிப்பவர்கள் யார்? ஏழை வீட்டுப் பிள்ளைகளா?? இரும்படிப்பவர் வீட்டுப் பிள்ளைகளா?? மூட்டை தூக்கும் தொழில் செய்வோரின் பிள்ளைகளா?? தாழ்த்தப்பட்ட குடும்பத்துப் பிள்ளைகளா?? இல்லை.  அவர்கள் எல்லாம் செல்வத்தில் திகைப்போரின் பிள்ளைகள். அவர்கள் நீட் தேர்வு என்று ஒன்று இல்லாமல் போனாலும் கூட, கவுன்சிலிங்கில் இடம் கிடைக்காமல் போனாலும், செல்ப் பைனான்ஸில் படிக்கிற அளவிற்கு வசதி படைத்தோர் வீட்டுப் பிள்ளைகளே, பெரும்பாலும் சிபிஎஸ்இ பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்க முடிகிறது.
  திமுக தலைமையால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தால் பெறப்பட்ட தகவல்களின் மூலம் பின்வருவனவற்றைப் பகுத்தாய்கிறார் நண்பர் பழூரான்விக்னேஷ்.  இதைப் பார்த்துவிட்டு கொஞ்சம் சிந்தித்து முடிவு செய்யுங்கள். எல்லா தமிழகத்து மாணவர்களும் இதிலே வெற்றி தான் பெற்றிருக்கிறார்களா?? யென்று. கீழே அவர் பெற்ற புள்ளிவிவரங்கள் வருமாறு.
அரசாங்க மருத்துவ கல்லூரியில்  அரசாங்க பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 22
2015 -2016 : 33
2016-2017 : 27
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 04
அரசாங்க மருத்துவ கல்லூரியில்  அரசாங்கம் உதவி பெரும் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015: 0
2015 - 2016 :59
2016 -2017 :58
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 03
அரசாங்க மருத்துவ கல்லூரியில்  தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 2226
2015 -2016 : 2247
2016-2017 : 2321
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 20 ( huge difference)
அரசாங்க மருத்துவ கல்லூரியில்  CBSE  பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 0
2015 -2016 : 0
2016-2017 : 14
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 611
——————————————————————
தனியார் மருத்துவ கல்லூரியில்  அரசாங்க பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 12
2015 -2016 : 3
2016-2017 : 3
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 01
தனியார்  மருத்துவ கல்லூரியில்  அரசாங்கம் உதவி பெரும் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015: 0
2015 - 2016 :16
2016 -2017 :26
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 0
தனியார்  மருத்துவ கல்லூரியில்  தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 798
2015 -2016 : 657
2016-2017 : 1173
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 03 ( huge difference)
தனியார்  மருத்துவ கல்லூரியில்  CBSE  பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 2
2015 -2016 : 2
2016-2017 : 21
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 283
நன்றிபழூரான் விக்னேஷ் ஆனந்த்

No comments:

Post a Comment