Monday, February 4, 2019

வாவ் இவர் டிஜிட்டல் எம் எல் ஏ.

பள்ளி நண்பர்களுடான அரசியல் கலந்துரையாடல்கள் எப்போதுமே பெரும் களேபரத்தில் தான் முடிவடையும். அப்படியொரு நாள் பள்ளித் தோழர்களோடு விவாதித்துக் கொண்டிருந்த போது, கோபமடைந்த நண்பன் அருண்குமார்,,, நீ அரசியல்ல பெரிய புடுங்கிண்ணா,,, நம்ம ஊரு ரோடையெல்லாம் பாருடா,,, உங்காளு தான எம் எல் ஏ. அவருகிட்ட சொல்லி போடச் சொல்லு பார்ப்போம் என்கிற சவாலோடு அன்றைய விவாதத்தை முடித்த  வைத்தான் வகுப்புத்தோழன் சென்ன ஐ.டி.கம்பெனியில் பணிபுரியன் என் ஆருயிர் நண்பன் கோ.அருண்குமார் B.E.

    என்னதான் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் எனக்கு நேரிடையாகவோ, நல்ல தொடர்புடன் அவரோடு இருப்பவனாகவே இருந்தாலும் கூட, மக்கள் பிரச்சனைய தனியொருவனாகக் கொண்டு சென்று, அதில் அவர் கவனம் ஈர்க்கப்படுகிற அளவிற்கு நான் ஒன்றும் மக்கள் பிரதிநிதியோ அல்லது கழகத்தில் பொறுப்பில் இருப்பவனோ கிடையாது. சாதாராண திமுக தொண்டன். அடிமட்டத் தொண்டன்.

  என்ன செய்வது, நண்பர்கள் நம் அரசியல் ஆர்வத்தை எள்ளிநகையாடிவிட்டார்களேயென்ற தாழ்வுமனப்பான்மையோடு தான் பலநாட்கள் இருந்தேன்.

   திடிரென ஒரு நாள் கடகடவென்று "குண்டும் குழியுமாகக் கிடக்கிற சாலைகளை சட்டமன்ற உறுப்பினர் அவர்களே சீரமைத்துத் தாருங்கள்" என்கிற ரீதியாக பொதுப்படையான  கடிநம் ஒன்றை எழுதினேன். நண்பர்களுக்கும், சொக்கநாதன்புத்தீர் இளைஞர்கள், யுவதிகள் பலருக்கும் அந்தக் கடிதம் வாட்ஸ் அப்பில் பரந்தது. கூடவே, சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் அவர்களின் வாட்ஸ் அப் எண்ணும் சேர்த்து, நம்முடைய சட்டமன்ற உறுப்பினருக்கு நமது ஊர் நலம் பெறுவதில் அக்கறைகொண்டு இந்தக் கடிதத்தை அனுப்பிடுங்கள் என்ற செய்தியும் கூடவே பறந்தது.

  எல்லோரும் அனுப்பினார்கள். அனுப்பியதில் பலருக்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் அவர்கள் போன் செய்து பேசியிருக்கிறார். அவர் பேசிய செய்தியை நண்பர்கள் சொல்கிற போது அவர் மீதான மதிப்பையும் அவரது செயல்பாட்டையும் பாராட்டியது கண்டு அந்த இடத்தில் ஒரு தி.மு.க காரனாக உள்ளம் மகிழ்ந்தேன். நெகிழ்ந்தேன்.

  சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கடந்த ஜன 13 ஆம் நடந்த தி மு க கிராமசபைக் கூட்டத்தில் எங்கள் ஊரில் பேசிய போது,  ரூபாய் முப்பது லட்சம் மதிப்பீட்டில் சொக்கநாதன்புத்தூரின் உட்புற சாலைகளுக்கு டென்டர் விடப்பட்டிருக்கிறது. அதற்கான வேலைகள் சீக்கிரம் துவங்கப்பட இருக்கிறது என்று அறிவித்தார். அடடா!! யென்ன ஆச்சரியம் இது என்று வியந்தேன். மகிழ்ந்தேன். நெகிழ்ந்தேன்.

   அதையெல்லாம் கடந்து, இன்று நான் மிகப்பெரிய மகிழ்ச்சியில் திகைத்து நிற்கிறேன். காரணம், சொக்கநாதன்புத்தூரின் உட்புற சாலைகள் சீரமைக்கப்படுவதற்கான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய அண்ணன் தங்கப்பாண்டியன் அவர்களே நேரடியாக வந்து தொடங்கி வைத்திருக்கிறார்.

    சொக்கநாதன்புத்தூரின் பல்வேறு இடங்களில் படித்து நல்ல பணியில் இருக்கக் கூடிய இளைஞர் பெருமக்களும், சொக்கை மண்ணின் மைந்தர்கள் பலரும் வாட்ஸ் அப் மூலம் மட்டுமே அனுப்பிய கோரிக்கைக் கடிதத்திற்கு மதிப்பளித்து நிதி ஒதுக்கி சாலைகள் சீரமைப்புப் பணி துவங்குவதற்காக மக்கள் பணியாற்றிய சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் தங்கப்பாண்டியன் அவர்களுக்கு எனது முதல் கோடி நன்றிகள்.

  இந்தக் கடிதத்திற்கு உறுதுணையாக இருந்து, எதைப்பற்றியும் சிந்திக்காமல் சட்டமன்ற உறுப்பினரின் எண்ணுக்குப் பகிர்ந்த பல மண்ணின் மைந்தர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லக்கூட வராத நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதியில், வாட்ஸ் அப் கோரிக்கைக்கு செவி சாய்த்து செயலாற்றும் உங்கள் பணி மிகப்பெரிய பாராட்டுக்குரியது.

  சட்டமன்ற உறுப்பினரே உங்கள் பணி தொடரட்டும். உங்களின் மக்கள் பயணம் வெல்லட்டும்.

No comments:

Post a Comment