Wednesday, February 4, 2015

"மக்கள் முதல்வர்" கலைஞர்

ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலைக்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 165 கோடி ரூபாய் நிதி இதுவரை வந்து சேரவில்லை. இதனால் ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலை பராமரிப்பின்றி மூடுகின்ற நிலைக்குத் தள்ளப்படுவதைக் கண்டித்து பனிரெண்டாவது ஆர்ப்பாட்டமாக தி.மு.க, ஆலைப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களோடு சேர்ந்து களமிறங்கியது. தி.மு.க சார்பில் ஒரு மாபெரும் எழுச்சியை அந்த ஆர்ப்பாட்டத்திலே கண்ட போது, பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்கள் "திருவரங்கம் தேர்தலுக்கு நீங்கள் செய்கின்ற செலவில் ஒரு கடுகளவு தான் இந்த நூற்றி அறுபத்தைந்து கூடி, ஆக இந்தத் தொகையை ஒதுக்குவது ஒன்றும் அரசுக்குப் பெரிய விசயமல்ல, ஆகவே தயவு செய்து தமிழ்நாட்டின் பினாமி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புல்லுக்குப் பாய்வதை கொஞ்சமேனும் நெல்லுக்கும் பாயவிடுங்கள்" என்று பேசிய போது கூட்டம் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பரித்தது.

மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் அவர்கள் பேசுகின்ற போது, என்னதான் காலில் வலியோடு நின்று கொண்டிருந்தாலும் கூட, அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாது, அவருக்கேயுரிய அதே நக்கலோடும், நையாண்டியாடும் செயல்படாத இந்த பினாமி அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

ஆரம்பத்திலேயே பேசிய இராசபாளையத்தின் துடிப்பு மிக்க அடுத்த இளம் பேச்சாளர் அண்ணன் கருப்பழகு அவர்கள், ஒட்டு மொத்த ஆர்ப்பாட்டக்காரர்களையும் தன் பேச்சால் கட்டிப் போட்டார். கீழே இறங்கிய போது, திருவில்லிபுத்தூர் வழக்கறிஞரிடம், அண்ணே அடுத்த வாயுதா வந்துருச்சு என்று கூறிக் கொண்டிருந்ததை அரைக்காதில் கேட்டு விட்டு, என்னோடு மிக அன்போடும் பாசத்தோடும் பேசக்கூடிய அண்ணன் கருப்பழகு, வழக்கு வாங்குகின்ற அளவிற்கு ஒரு நல்ல பேச்சாளராக தற்னைப் பண்படுத்திக் கொண்டிருக்கிறார் என்கின்ற எண்ணத்தை மனதில் புதைத்துக்கொண்டு அண்ணனுக்கு வாழ்த்துக் கூறினேன்.

ஆனாலும், நான் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலைஞரின் மக்கள் நலத்திட்டத்தின் மீதான அக்கறைகளை ஒரு நன்மதிப்போடு அளவிட்ட போது, இப்படிப்பட்ட சமூக அக்கறை மிகுந்த ஒருவரையா நாம் தலைவராகப் பெற்றிருக்கிறோம் என்றெண்ணி அகமகிழ்ந்தேன்.

காமராஜர் முதல்வராக இருந்த போது, ஆலங்குளத்தஅல் சிமெண்ட் தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கான திட்டம் தீட்டப்பட்டது . பின் காமராஜரின் "கே" பிளான் படி, காமராஜர் காங் கிரசை வளர்க்க களமிறங்கியவுடன் முதல்வரான பக்தவத்சலத்தால் ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1967 களில் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. பேரறிஞர் அண்ணா முதல்வரானார். ஆனால் அவரை நம்மோடு நீண்ட நாள் அவர் முதல்வராக இருக்க இயற்கை இடம் கொடுக்காததால், 1969 பிப்பரவரியில் இயற்கை எய்தினார். பின் முதல்வான கலைஞரால் பக்தவத்சலத்தால் அடிக்கல் நாட்டப்பட்ட தொழிற்சாலைக்கு மூடு விழா கண்டுவிடவில்லை கலைஞர், மக்களின் நலன் கருதி, மக்கள் மீது அக்கறை கொண்டு, இந்தத் தமிழ்நாட்டை வளப்படுத்த வேண்டும் என்கின்ற உறுதி கொண்டு, கலைஞர் தொழிற்சாலையைத் தொடங்குவதற்கான முயற்சிகளை வெற்றி கரமாக மேற்கொண்டு, பக்தவத்சலத்தால் இந்தித் திணிப்பை எதிர்த்து செயல்பட்ட தி.மு.க வினர் மீது செய்யப்பட்ட வன்கொடுமைகளை மறந்து, மக்கள் நலனை மட்டுமே மனதில் வைத்து செயல்பட்டு சிமெண்ட் ஆலையை திறந்த கலைஞரை, இவரோல்லவோ "மக்கள் முதல்வர்" என்று வியந்து நின்றேன்.

No comments:

Post a Comment