Friday, February 20, 2015

வாழ்த்துக்கள்

கடந்த இரண்டு மாதமாக என் அலுப்பிற்கு மருந்தாய் இருந்த விஜய் டி.வி யின் சூப்பர் சிங்கர் 4 நிகழ்ச்சி இன்றோடு நிறைவடைந்தது. கடும் பதற்றத்துடனும் எதிர்பார்ப்புடனும் ஹரிப்ரியாவும் ஸ்பூர்தியும் தான் முதலிடங்களைப் பிடிப்பார்கள் என்றெண்ணிக் கொண்டிருந்த எனக்கு ஹரிப்ரியாவின் பின்னடைவில் பெரும் வருத்தம் உண்டு.

மூக்கு எப்புடி விடைக்குதுனு பாருனு எல்லாருமே சொல்கிறளவிற்கு மூக்கு விடைக்கிற அளவிற்கு ஒவ்வொரு பாடலிலும் தன் திறமையை மிகச் சாதுர்யமாகக் காட்டி முதல் இடத்தைப் பிடித்த ஸ்பூர்த்தியைக் கண்டு வியந்து போய் நிற்கிறேன். நான் வியந்து நிற்பதற்குக் காரணம் அவளுடைய வயது இன்னமும் பனிரெண்டைக் கூட தொடவில்லை என்பது தான். ஒரு குறிப்பிட்ட வயதில் இந்த உலகின் மிகச் சிறந்த பாடகியாக ஸ்பூர்தி வர எனது வாழ்த்துக்கள்.

அடுத்து, ஜெசிகா இரண்டாம் இடத்தைப் பிடித்ததில் எனக்கு வியப்பொன்றும் இல்லை. ஆனால் அவளுடைய தந்தை ஜெசிகா பெற்ற ஒட்டு மொத்த பரிசையும் தமிழகத்தில் உள்ள அனாதைக் குழந்தைகள் காப்பகம் ஒன்றிற்கும், இலங்கையில் உள்ள அனாதைக்குழந்தைகள் இல்லம் ஒன்றிற்கும் நன்கொடையாக அளிக்கிறேன் என்ற போது, நான் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் தான் உட்கார்ந்திருக்கிறேன் என்பதை மறந்து நானும் அந்தக் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே சென்று கரவொலி எழுப்பிய அந்த உணர்வோடு, என்னை மறந்து ஜெசிகா தந்தையின் மனதை எண்ணி(இதுக்கெல்லாம் ஒரு பெரிய மனசு வேணும்யா)ப் பெருமை கொண்டு கரவொலி எழுப்பினேன்.

ஆனாலும் முதல் இறுதிப்போட்டியாளராக உள்ளே நுழைந்த ஹரிப்ரியாவின் பின்னடைவு தான் எனக்கு வருத்தமளிக்கிறது.

ஒன்னே ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கிட்டேன். நல்லா ஒரு பிள்ளையைப் பெத்து நேரா விஜய் டி.வி ஆபிஸ்ல கொண்டு போயி போட்டுட்டோம்னா,, அஞ்சு வயசு ஆகுறதுக்குள்ள அம்பது வயசுல அடைய வேண்டிய பேரும் புழும் அஞ்சே வயசுல வாங்கிரும் என்பது தான்.

என் இரவு நேரச் சாப்பாட்டுப் பொழுதை சூப்பர் சிங்கர் போல் வேறெதுவும் கடந்த இரண்டு மாதமாக பல்வேறு மன உளைச்சல்களில் இருந்த எனக்கு இனிமையாக்கியதில்லை.

ஆறு குழந்தைகளும் தன் வாழ்வில் சிகரம் தொட இந்த ரசிகனின் வாழ்த்துக்கள!!

No comments:

Post a Comment