Wednesday, November 26, 2014

சீமானும் வரலாறும்

   தமிழ்நாஜிக்களின் தலைவன் சீமான் பேசிய காணொளி ஒன்றைக் காணநேரிட்டது.
   அதிலே சீமான் பேசுகின்ற போது ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாஞப் பண்டிதர், வேலுநாச்சியார், கட்டபொம்மன், வீரன் அழகுமுத்து, தீரன் சின்னமலை ஆகியோர் எனது தமிழப்பாட்டன்கள் என்றும், அவர்களையெல்லாம் அந்தந்த சாதிகளிடம் இருந்து மீட்பது தான் எங்களுடைய முதல் பணி என்றும் பேசியிருந்தார்.
     முதலில் மேற்சொன்ன மாவீரர்களில் எத்தனை பேர் தமிழர்கள் என்பதை அறிந்து விட்டாவது, அவர் "என் தமிழ்ப்பாட்டன்கள்" என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, மாவீரன் அழகுமுத்துவின் வரலாற்றை படித்துப் பார்த்தவன் என்கின்ற முறையில், அவர் பற்றி இங்கே பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
    மாவீரன் அழகுமுத்து விஜயநகரப் பேரரசின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த "யது குல"த்தைச் சார்ந்தவர். அவர்கள் கண்ணனையும், பெருமாளையும் தங்களின் வழிபாட்டுத் தெய்வங்களாக வணங்கி வந்தனர். பின்னர் விஜயநகரப் பேரரசு அழிந்த உடன், அங்கிருந்து  தங்களின் குடிகளை இடம்பெயர்த்துக் கொண்டு விஜயநகரப் பேரரசின் கீழ் வாழ்ந்த மக்கள் அனைவரும், தென்பகுதியை (தற்போதைய தென்னிந்தியா) நாடி வந்தவண்ணம் இருந்தனர்.  மாவீரன் அழகுமுத்து உட்பட.
       மதுரையின் பாண்டிய மன்னனின் கட்டுப்பாட்டிற்குள் இடம்புகுந்த மாவீரன் அழகுமுத்து, அவரின் சகோதரர் மற்றும் சகோதரியும், தென்காசி பகுதியில் ஆண்டுகொண்டிருந்த அழகர்முத்து என்பவரின், எல்லைக் காவலனாக மதுரை மன்னனால் அனுப்பி வைக்கப்பட்டார். அதன்பின்னர் கழுகுமலையின் அரசவைக்கு உயர்வுபெற்றார். அதன்பின் "கட்டாளங்குளம்" எனும் ஊரில் ஒரு கோட்டை கட்டி அங்கே மன்னராக நியமிக்கப்பட்டார்.
   வடக்கே இருந்து வந்த மாவீரன் அழகுமுத்து, இங்கே வாழ்ந்து கொண்டிருந்த, கண்ணனையும் பெருமாளையும் வணங்குகின்ற எடையர் இன மக்களோடு, தான் வணங்கும் அதே தெய்வங்களைத் தான், இந்த மக்களும் வணங்குகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு தன்னையும் எடையரின மக்களோடு ஒப்புமைப்படுத்திக் கொண்டு அம்மக்களுக்கு காவலராகவும் வாழ்ந்து வீரதீர செயல்களைச் செய்து கொண்டிருந்த அழகுமுத்து, ஒரு கட்டத்தில் ஆங்கிலேயரின் பீரங்கிக் குண்டுகளுக்கு இரையாகி மடிந்து போனார் என்பது வரலாறு.
    விஜயநகப் பேரரசின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்த "யதுகுல" மக்களில் ஒருவரான "மாவீரன் அழகுமுத்து" தமிழப்பாட்டன் என்று சொல்லி, வரலாற்றைத் திரித்துக் கொண்டிருக்கும் சீமான் போன்றவர்களின் முகத்திரை கிழிக்கப் பட வேண்டுமென்தற்காகவே இதைப் பதிகிறேன்.
     இப்படி வரலாறு தெரியாமல்,  பிறப்பால் தமிழரல்லாதவர்களையெல்லாம், தமிழரென்றும், பிறப்பால் தமிழரானவர்களையெல்லாம் தமிழரல்லாதோர் என்றும் பேசிக் கொண்டிருக்கும்,  சீமானின் பேச்சையும் கேட்டு கை தட்டிச் சிரித்துக் கொண்டிருக்கும், உணர்ச்சிப் பிளம்பாய் வெடித்துக் கொண்டிருக்கும் "ஈழத் தமிழர் நலனில் உண்மையான அக்கறை" கொண்ட இளைஞர்கள் கூட்டம் தடம் மாறிச் செல்வதை நினைத்தால் வருத்தமாய்த் தான் உள்ளது.

No comments:

Post a Comment