Thursday, March 19, 2015

வினோத்ராயை என்ன செய்யலாம்?

தமிழ்நாட்டு இளைஞர் கூட்டமெல்லாம், அய்யோ,, என் நாட்டு வளங்களை எல்லாம் ராசாவும் தி.மு.க வும் சேர்ந்து திருடிச் சென்று விட்டது. இவர்கள் தமிழர்களென்பதால் எங்கள் நாட்டின் வெளி மாநிலங்களில் நாங்கள் செல்கின்ற போது, எங்களைத் தமிழர்கள் என்று சொல்வதற்கு கூட வெட்கமாக இருக்கின்றது என்று புலம்பித் தள்ளினார்கள்.

அதற்குக் காரணமான 2G ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் விட்டதில் ஆ.ராசா 1.76 லட்சம் கோடி ஊழல் செய்து விட்டாரென்று இந்தியத் தணிக்கைத் துறை அதிகாரி வினோத்ராய் அறிவித்தது தொடர்பான வழக்கு இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. ஆனால் இந்த ஆண்டு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை தகவல் தொழில்நுட்ப ஆணையம் ஏலம் விட்டதில் இருந்து வினோத் ராய் எவ்வளவு பெரிய பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார் என்பது நிரூபணமாகி விட்டது.

இக்குற்றச்சாட்டால் ஆ.ராசாவையும் தி.மு.க வையும் தாண்டி எத்தனையோ தமிழ் இளைஞர்களின் அவமானத்திற்கும் மன உளைச்சலுக்கும் காரணமான வினோத் ராய்க்கு, என்னைப் பொறுத்தவரை அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுத்தால் கூட அது குறைவு தான்.

"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு"

2 comments:

  1. உண்மை.. பொய் சொல்லி எழுதி ஆட்சி மாற்றம் ஏற்படுத்தினர்.
    எதை சொல்லி வேண்டுமானாலும் இங்கே பிழைக்க வேண்டும்.
    வெட்கம்..

    ReplyDelete
  2. What about the 100 crore passed to kalaigner TV through kaspa? Are you saying that a crime is not a crime if amount is less?

    ReplyDelete