Showing posts with label இழப்பு. Show all posts
Showing posts with label இழப்பு. Show all posts

Monday, February 23, 2015

"இதப் படிங்க மொதல்ல"

ஒரு கிராமத்தில் ஓட்டல் நடத்தி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஒருவர், சென்னையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் தன்னுடைய நண்பரோடு சாப்பிடச் சென்றிருக்கின்றனர்.

இருவரும் சாப்பிட்டு முடித்து பில் கொடுக்கச் சென்ற போது, அங்கே சொன்ன பில் தொகை இருவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆமாம் முன்னூறு ரூபாய் சொல்லியிருக்கிறார்கள்.

உடனே ஓட்டல்காரரின் நண்பர், அவரிடம் உன் ஓட்டல்ல சாப்பிட்டா முப்பதும் முப்பதும் அறுபது ரூவா தான, நீ வாங்குவ எனக் கேட்க, உடனே அவரும் ஆமாம் எனத் தலையசைக்க, அப்போ நீ ஒவ்வொருத்தருக்கும் நூற்றி இருபது ரூபாய் நட்டத்துல வியாபாரம் பார்த்திருக்க என்று சொல்ல, தன்னுடைய கடையை இந்த நட்சத்திர ஓட்டலோடு ஒப்பிடுவது தவறு என்று புரிந்து கொள்ளாத ஓட்டல் கடைக்காரர் தலையில் அடித்து அழ ஆரம்பிக்க, உடனே அவருடைய நண்பர், இத்தனை வருசமா நீ ஓட்டல் கடை நடத்திருக்க, அதனால உனக்கு இத்தனை ரூபாய் நட்டம் என்று அவரை மேலும் காயப்படுத்த அந்த ஓட்டல்காரர் அங்கேயே பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டார்.

நிற்க,,,

என்னடா இவண் இப்படி சம்பந்தமே இல்லாம ஒரு கதையைச் சொல்லிட்டிருக்கான்னு நீங்க நினைக்கலாம். விசயத்துக்கு வரேன்.

இதே மாதிரி ஒரு முட்டாள்தனமான ஏமாற்றுப் பிரச்சார வேலை தான் ஸ்பெக்ட்ரம் விசயத்திலும் நடந்திருக்கிறது.

3g ரேட்டுக்கு 2g ஏலம் போயிருந்தால் 1,76,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்காமல் தடுத்திருக்கலாம் என்பது தான் தணிக்கை அதிகாரியின் விளக்கம். 3g என்றால் என்ன என்பதை தாங்கள் அனைவரும் அறிந்ததே. 3g பைவ் ஸ்டார் ஓட்டல் மாதிரி. 2g கிராமத்து இட்லிக் கடை மாதிரி.

பைவ் ஸ்டார் ஓட்டலில் ஒரு இட்லி இருபது ரூபாய்க்கு விற்றால் அங்க என்னென்ன வசதி இருக்கும் என்பது நட்சத்திர ஓட்டல்களுக்குச் சென்றவர்களுக்கும், கிராமத்து இட்லிக்கடையில் என்னென்ன வசதிகள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

பைவ் ஸ்டார் ஓட்டலை கிராமத்து இட்லிக்கடையோடு ஒப்பிடுவது எப்படித் தவறோ, அதுபோல் 2g யை 3g யோடு ஒப்பிடுவதே தவறு.

ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்தும், இந்த உண்மை நிலையைக் கூடப் புரியாமல், இன்னும் சிலர் 1.76 லட்சம் கோடி ஊழல் ஊழல் என்று மாரடிப்பதைப் பார்த்தால், உங்களையெல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்தவே முடியாதுடான்னு சொல்லி விட்டு நகர்ந்து போகத்தான் நமக்குத் தோன்றுகிறது.

 (தமிழ்மணம் வாசகர்களுக்காக என்னுடைய இக்கட்டுரையை மீள்பதிவு செய்திருக்கிறேன்.)